Lyrics - Sakthi Somasundaram
Singer - Sakthi #AjaeyShravan
Music Composer - Sakthi Radhika Sivaraj
Programming & Mixing - Sasi Keys
Video script - Sakthi Sridevi Velumyl
Video editing - Sakthi Uma, Sakthi Indira
Thumbnail - Sakthi Harsha
Recordist - Sakthi Yuvaraj, Prasad Labs
For Adhiswara
#amma #omsakthi #guru #amma #melmaruvathur #kanakadharastotram #ponmazhai #bangaruamma #adhiparasakthi
ஓம்சக்தி
குருவடி சரணம் திருவடி சரணம்
கருணை மழை பொழியும் மருவூர் அரசியை கனக மழை பொழியச் செய்யும் புலவர் சோமசுந்தரம் அவர்களின் "மருவூர் பொன்மழை" கேட்டு கான மழையில் நனைவோமா சக்திகளே
1.மாதாவாக இம் மண்ணில்
மருவூர் இறங்கி வந்தவளே!
தாதா எனவே பணி கேட்டுத்
தரணியை நானும் ஒளிசெய்வேன்!
காதும் காதும் வைத்தாற்போல்
கனிவுடன் நயந்து கேட்டிடுவேன்!
போதும் போதும் எனும் படிக்கே
பொன்மழை எனக்கே பொழிவாயே!
2. ஏதோ சொன்னான் இவன் சொன்னான் என்னும் வார்த்தை அல்ல இவை!
தீதோ நன்றோ நானறியேன்!
தெய்வமே பொன்மழை பொழிவாயே!
வாதுகள் வழக்குகள் வம்புகளாய்
வாடித் தனியே தவிக்கின்றேன்!
பேதைவறுமை தனைநீக்கிப்
பெய்க பொன்மழை நீ தாயே!
3.எட்டுத்திக்கும் உனைவேண்டி
எட்டாச் செல்வம் எட்டிடுமே!
பட்டுத் தெளிந்த பக்தன் இவன்
படட்டும் என்றே இருப்பாயோ!
எட்டாச் செல்வம் எட்டிடுமா?
இல்லை எட்டாதங்கே போயிடுமா?
எட்டாச் செல்லம் எட்டுதற்கே
இங்கே பொன்மழை பொழிக அம்மா!
4. மருவத்தூரிலே வந்துதித்து
மங்காச் செல்வம் அளிப்பவளே!
மந்திரத் தமிழில் நீ நின்று
மனமும் கனிந்தே களிப்பவளே!
இகபர சுகமே எல்லோர்க்கும்
ஏற்கும்படியே தருபவளே!
மகனிவன் பணிந்தே கேட்கின்றேன் மழைபோல் செல்வம் தருவாயே!
5. எல்லார் போலவும் பகட்டுக்கா
இங்கே பொன்மழை கேட்கின்றேன்?
வல்லார் முன் போய் நில்லாமல்
வழங்குக பொன்மழை என்றேன் நான்!
வறுமை ஒழிக்க ஒருபக்கம்
வளம்பல செய்ய மறுபக்கம்
வருவாய் தருவாய் என்றே நான்
வான்மழை போலக் கேட்கின்றேன்!
6.என்வலக் கையில் பொருளிருந்தால் இல்லார்க்கெல்லாம் வழங்கிடுவேன்!
இதுவும் தாயே தந்ததென இவ்வுலகெல்லாம் முழங்கிடுவேன்!
என் இடக்கையில் பொருளிருந்தால் எல்லார்க்கும்மே கொடுத்திடுவேன்!
இதுவும் தாய்நீ தந்ததென
ஏழாயிரம் கோடி தொடுத்திடுவேன்!
7. மருவத் தூரிலே மருவரசி
மனங்கவர் ஞானக் குருவரசி!
மாதா வுனக்கே மகனாகி
மண்ணில் வறியனாய்த் திரிவதுவோ?
மருவரசி பெற்ற ஒரு பிள்ளை
மனந்தான் குறுகிக் கூசுவதோ!
மருவூர்ப் பெருமை இதுவென்றே
மற்றவர் கேலி பேசுவதோ?
8.ஆர் ஆர் வந்தார் அந்நாளில்
அழகிய திருமிகு ஆரூரில்!
ஊரார் வியந்து பாராட்டும்
உன் திருத் தொண்டர் உருள்வலத்தால்
பாரோர் மகிழ மழை தந்தாய்
பாவி எனக்கே ஆகாதோ?
பரிதவித்து இங்கே நான் கிடந்தால் பராசக்தி மனந்தான் நோகாதோ!
9. உலகம் செழிக்கத் தாமரையில் உட்கார்ந்திருக்கும் திருமகளே!
கலகம் செய்யும் மண்ணுலகில்
கனகப் பொருளே பேசுதம்மா!
கலக்கம் எனக்கும் வந்ததம்மா!
கையில் காசில்லை என்பதனால்!
விளக்கம் தரவே பொன்மழையை
விரைந்து நீயே பொழிக அம்மா!
10. வேம்பின் இலையை வீசியதால் விளைந்த பொன்மழை யாமறிவோம்!
காம்பின் பாலை நினைந்தளிக்கும்
காராம் பசுவே ஆனவளே!
வீம்பும் வேகமும் எனக்கில்லை
வெற்றியே விளைக்கும் திருமகளே!
தேம்பும் பிள்ளை துயர் தீர்க்கத்
தெய்வமே! பொன்மழை பொழிவாயே!
11. தர்மம் தழைக்கச் செய்திடுவேன்
தாயுன் புகழைப் பாடிடுவேன்!
மர்மம் செய்யும் மாயத்தை
மகன் இவனிடத்தும் செய்யாதே!
கடமை தன்னைச் செய்வதற்கே
கனக மழையும் பொழிவாயே!
கருணை மழையைப் பொழிபவளே!
கனக மழையும் பொழிவாயே!
12. பொன்மழை எனக்கே பொழிந்திட்டால் புறப்பட்டு விடுவேன் உனைநோக்கிப்
பண்மழை போலப் பாட்டிசைப்பேன் பங்காரு அடிகள் பணிகேட்பேன்
கட்டிய துணியொன்று போதுமெனக் கண்டிப்பாக நான் வருவேன்!
எட்டிய மட்டும் அவர் பணியை
இவ்வுல கெல்லாம் செய்திடுவேன்!
13.சங்கரன் முன்னே பொழிய வைத்தாய்! வேதாந்த தேசிகர்க்கும் அவ்வாறே!
தன்கரம் கொண்டே இவனுக்கும் தங்கமழை இங்கே பொழிவாயே!
வறுமை வாழ்க்கை விளிம்புக்கே
வாடியே போகத் தெம்பில்லை!
பெருமை உனக்கே சேருமம்மா
பெய்க பொன்மழை நீ தாயே!
14. கலைகள் எல்லாம் தருபவளே! கவலைகள் எனக்கே தருவதுமேன்?
விலையாய் எனையே ஏற்றிடுவாய்! விரைந்தே பொன்மழை பொழிந்திடுவாய்
வேய்ங்குழல் ஊதும் கண்ணன் போல் விளங்குமுன் புகழை ஓதிடுவேன்!
தாழ்குழல் மகளே! தாயவளே!
தங்கமழை இங்கே பொழிவாயே!
15.நாதமே! கீதமே! நன்மகளே!
நானிலம் ஆளும் பொன்மகளே!
வேதமே! வித்தையே! வேம்பரசி!
விரும்பியே தங்கமாய் ஆனவளே!
பச்சைத் துளசியில் பசும் பொன்னைப் பார்த்திட ஆக்கித் தந்தவளே!
இச்சை என்மேல் கொள்வாயே!
இன்றே பொன்மழை பொழிவாயே!
16. வாடிய பொழுதில் வண்டமிழில் வழங்குக பொன்மழை எனக்கேட்டுப்
பாடிய பாடல் படிப்பார்க்கும்
பக்கம் நின்றே கேட்பார்க்கும்
நாடிய செல்வம் தர இங்கே
நற்றமிழ் தன்னில் வேண்டி நின்றேன்!
தேடிய செல்வம் தருவாயே!
தெய்வமே! பொன்மழை பொழிவாயே!
17.தாயான குருநாதர்
தயைபோலப் பொழிக அம்மா!
சேயான அவரன்பின்
சீர்போலப் பொழிக அம்மா!
மருவத்தூர் அடிகளாரின்
மனம்போலப் பொழிக அம்மா!
குருவான எம்மிறைவர்
குணம்போலப் பொழிக அம்மா!
18.சீர்மருவூர்ப் புகழ்போலச்
சிறந்திங்கே பொழிக அம்மா!
நேர்நின்று அருள்பேசும்
நின்விழியால் பொழிக அம்மா!
அருள்மழை பொழிகின்ற
ஆறுபோல் பொழிக அம்மா!
பொருள் மழை பொன்மழையாய்ப் புவியெலாம் பொழிக அம்மா!
Негізгі бет SONG| மருவூர் பொன்மழை| சக்தி ஆசிரியர் சோமசுந்தரம்| MELMARUVATHUR PONMAZHAI |
Пікірлер: 169