சித்திரகுப்தர் பிறந்த நேரம் -சித்திரை மாதம் பௌர்ணமி தினம். அதாவது சித்ரா பௌர்ணமி. சித்திரை நட்சத்திரத்தில் தோன்றிய அந்தக் குழந்தையே சித்ரகுப்தர் ஆவார். பிறக்கும் போதே அழகாகவும், இடக்கையில் ஓலைச்சுவடிகள், வலக்கையில் எழுத்தாணி கொண்டும் பிறந்தார் என்கிறது புராணம்.
இவர் இமயமலையில் கடும் தவம் புரிந்து பல சக்திகளைப் பெற்றார்.
சூரியபகவானின் விருப்பப்படி எமனுக்கு உதவியாளராக பணியில் சேர்ந்து இன்றளவும் பணியாற்றுகிறார் என்கிறது புராணம்! தென்னிந்தியாவில் சித்ரகுப்தர் உள்ள திருக்கோயில் என்று பெருமையைப் பெறுகிறது இந்தத் திருத்தலம்!
நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு உரிய அதிதேவதையாக சித்ரகுப்தர் விளங்குவதாகத் தெரிவிக்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். கேதுவை மோட்சம் அளிக்கும் கிரகம் என்பர். யார் யார் மோட்சம் செல்வர் என்று உயிர்களின் கணக்குகளை கையில் தயாராக வைத்துக்கொண்டிருப்பவர் தான் சித்ரகுப்தர்!
ஆகவே இந்த கோவிலில் உள்ள சித்திரகுப்த பகாவானுக்கு நாம் தீபத்தை ஏற்றி புண்ணியபலம் வேணடும் என்று வேண்டினால் பாவங்கள் குறைந்து புண்ணியபலம் அதிகமாகும். சாபங்கள் நீங்கும்.இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும்.
#சித்ரகுப்தன்கோவில்காஞ்சிபுரம்
#சித்ரகுப்தர்கோயில்
#சித்ரகுப்தர்
#காஞ்சிபுரம்
#கேதுபகவான்
#சித்ராபௌர்ணமி
#பௌர்ணமி
#ஆன்மீகம்
#Chitraguptaswamytemplekanchipuram
#Kanchipuramtemple
#Kanchipuramkovil
#kanchipuram
#Chitraguptaswamytemple
#chitraguptatemple
#chitragupta
#chitrapournami
#pournami
#kethubhagavan
#aanmigam
#ss4kmedia
9445567112
Негізгі бет ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி திருக்கோயில் | காஞ்சிபுரம் |
Пікірлер: 16