சிவலோகநாதர் திருக்கோவில் திருப்புன்கூர்(20/274)
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து நான்கு தலங்களில் இத்தலம் இருபதாவது தலமாகப் போற்றப் படுகிறது.
மூலவர்: சிவலோகநாதர்
அம்மன்: சௌந்திர நாயகி
தீர்த்தம் : கணபதி தீர்த்தம்
தலவிருட்சம்: புங்க மரம்
ஊர்: திருபுன்கூர்
மாவட்டம்: மயிலாடுதுறை
பிராத்தனை
நாக தோஷம், பூர்வ ஜென்ம பாவ தோஷம், வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு
ஆகியவற்றுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டிய தலம்.
கோவில் அமைப்பு
ஐந்து நிலைகளைத் தாங்கி இராஜகோபுரம் கொண்டு இத்தலம் காட்சியளிக்கிறது. வெளிப்பிராகாரத்தில் குளம் வெட்டிய விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து
சுப்பிரமணியர் உள்ளது.
இங்கு தலமரமுத்துடன் பிரம்மலிங்கமும் சேர்ந்து உள்ளது. தொடர்ந்து சென்றால்
அடுத்து, கவசமிட்ட கொடி மரத்தை வணங்கி உள்ளே சென்றால்
பெரிய நந்தியை (நந்தனாருக்காக சற்று விலகியுள்ள) காட்டு வணங்கலாம்.
உள்வாயிலின் மேற்புறத்தில் வண்ணச்சுதையாலான பஞ்சமூர்த்திகள் காட்சி அமைத்திருந்தார்கள்.
மேலும் தொடர....துவார விநாயகரைக் கண்டு வணங்கிக் கொள்ளலாம் .
உள்வாயிலைக் கடந்தால் உள்பிராகாரத்தில் இடப்புறத்தில் சூரியன், நால்வருடன் கலிக்காமரும் சேர்ந்த சந்நிதி. சுந்தரவிநாயகர் சந்நிதி முதலியவை இருக்க ஒருசேர ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தால்,
சோமாஸ்கந்தர் பெரிய திருமேனியாக அருளுகிறார். இத்தலத்திற்குரிய தனிச்சிறப்பு கொண்ட இவ்வமைப்பை தரிசிக்க வேண்டிய ஒன்று.
அடுத்து சூரியன் அக்கினி வழிபட்ட லிங்கங்கள் இருக்குமிடம் சென்று வணங்கிக் கொள்ளலாம்..
ஆறுமுகர்சந்நிதி, தத்புருஷ், அகோர, வாமதேவ, சத்யோஜாத முகங்களின் பெயரில் அமைந்துள்ள லிங்கபாணங்கள், கஜலட்சுமி முதலிய சந்நிதிகள் வரிசையாக இருக்க, தொடர்ச்சியாக தொடர்ந்து வணங்கிக் கொள்ளலாம்.
இதனின் இடதுபுறமாக அம்பாள் சந்நிதி தனியாக வலம் வரும் அமைப்புடன் அமைந்திருக்கிறது.
நவக்கிரகம், பைரவர், சந்திரன் சந்நிதிகளைத் தொழுது வலம் முடித்ததும்,
நேராக சுவாமி சந்நிதியைக் காணலாம்.மூலவர் சற்று உயரக்குறைவுடனான பாணத்துடன் காட்சி அருளிக் கொண்டிருந்தார்.
இந்த சிவலிங்கம் மண் புற்றினால் ஆன சுயம்பு மூர்த்தியானவரென அர்ச்சகர் கூறினார்.
அதனால் சுயம்பு லிங்கத்தின் மீது குவளை சார்த்தியபடி காணப்படுகிறார் என்றும் கூறினார்.
மேலும் அர்ச்சகர்,....புணுகு சட்டம் சார்த்தும் நாளில் மட்டும் கவசமின்றி மூலவரை தரிசிக்கலாம் என்றும் கூறினார்.
இறைவன் கருவறை கோஷ்டங்களில் வலம் வந்தபோது, நர்த்தனவிநாயகர், பிட்சாடனர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் ஆகியோர்களை தரிசிக்கலாம்.
பிரம்மா, இந்திரன், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் மற்றும் ஏயர்கோன் கலிக்காம நாயனார், விறல் மீண்டர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றிருக்கின்றனர்.
இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் அம்பாள் சொக்கநாயகியின் சந்நிதி தனிக்கோவிலாக உள்ளது.
தல புராணம்:
திருநாளைப் போவார் நாயனார் (நந்தனார்) தம்மை நேராக தரிசனம் செய்து வணங்கும் பொருட்டு இத்தலத்து இறைவன் சிவலோகநாதர் தமக்கு முன்னால் அமர்ந்திருந்த நந்தியை சிறிது விலகி இருக்குமாறு செய்தருளிய தலம் திருப்புன்கூர்.
நந்தனார் கீழ் குலத்தில் பிறந்தவராதலால் ஆலயத்திற்குள் செல்வதற்கு அனுமதி இல்லாததால் வெளியில் இருந்தே வழிபடுவார்.
அப்போது இறைவன் முன் இருக்கும் நந்தி நன்றாக இறைவனைப் பார்க்க முடியாமல் மறைக்கும்.
அதற்காக கவலைப்பட்டு ஆதங்கப்பட்ட அவருக்கு தரிசனம் கொடுக்க நந்தியை விலகச் சொல்லி நந்தனாரின் பக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டிய தலம்.
எல்லா சிவன் கோவில்களிலும் உள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரியும்படி இருக்கும்.
ஆனால் நந்தனாருக்காக விலகிய இங்குள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரிவதில்லை.
இங்குள்ள நந்திகேஸ்வரர் மிகவும் அழகிய வேலைப்பாடுடன் ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்ட சிறப்புடையதாகும்.
மேலும் இத்தலத்தில் ஆலயத்தின் மேற்புறம் உள்ள ரிஷப தீர்த்தம் நந்தனாருக்காக விநாயகர் ஒரே இரவில் வெட்டிய குளம் என்ற பெருமை உடையதாகும்.
தல சிறப்பு
திருப்புன்கூருக்கு வந்து சிவலோக நாதரைத் தரிசிக்க முயன்ற திருநாளைப்போவார் (நந்தனார்), தன் குலநிலையை எண்ணி வெளியிலிருந்து பார்க்க, நந்தி மறைத்திருப்பது கண்டு வருந்தினார்.
இறைவன் இவருடைய உள்ளப் பக்தியைக் கண்டு மகிழ்ந்து நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு பணித்தார்.
இன்றும் நந்தி, இத்தலத்தில் விலகியிருப்பதை ஆலயத்துக்குச் சென்றோர் காணப் பெற்றிருப்பர்.
நந்தி விலகத் தரிசித்த நாளைப்போவார் நாயனார், கோயிலின் மேற்புறமுள்ள ரிஷபதீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்த எண்ணித் தனக்குத் துணை யாருமில்லாததால் இறைவனை வேண்டினார்.
இறைவன் அவருக்குத் துணையாகுமாறு கணபதியை அனுப்பினார்.
கணபதி துணையால் அத்தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்தினார்.
இதுவே கணபதிதீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. எனவே இங்குள்ள விநாயகர் 'குளம் வெட்டிய விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார்.
இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு இருக்காது. துவார பாலகர்கள் இங்கு தலை சாய்த்து இருப்பர்.
அமைவிடம்
வைத்தீஸ்வரன் கோயில் மணல்மேடு சாலையில் 3 கிமீ பயணித்தால் ஆலயத்தின் வளைவை காணலாம் . அதனுள் நுழைந்து 1 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து 15 கி.மீ.தூரத்திலும், வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 3 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இந்த சிவத்தலம். சீர்காழி மற்றும் கும்பகோணம் போன்ற இடங்களில் இருந்து திருபுன்கூர் வர பேருந்து வசதிகள் உள்ளன.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 9952700790
+91 9994144876
கோயில் Google map link
maps.app.goo.gl/1UT7bPPQvRLRM...
if you want to support us via UPI id
9655896987@ibl
Join this channel to get access to perks:
/ @mathina
- தமிழ்
Негізгі бет திருபுன்கூர் சிவலோகநாதர் கோயில் | நந்தனாருக்காக நந்தி விலகிய தலம் | நாகதோஷம் பரிகார தலம்
Пікірлер: 28