எதிர் காலத்துக்காக ஓயாமல் பொருளை மட்டுமே தேடும் மாய மனித குலமே:
நஞ்சாகிப் போன காற்று. கொடும் விஷத்தையே தெளித்து விளைவிக்கப்படும் உணவு பொருட்கள், நஞ்சாகி அறிதாகிப்போகும் நன்நீர், மனைகளாகி,பாலைவனமாகிப் போகும் விளை நிலங்கள், மது கடைகளே கதியாகி போன
இளைய சமுதாயம்.
பிஞ்சிலே பழுக்கும் யுவதிகள், பணத்துக்காக உணவில்
விஷத்தையும் கலந்து விற்கும் வியாபாரிகள், கலப்படமான உயிர் காக்கும் காலாவதியான மருந்துகள், செயற்கையாக கிருமிகளையும் அதற்க்கு வியாபார நோக்கில் மருந்தையும் உற்பத்தி செய்யும் வெள்ளைகார வீன்ஞானிகள். மரபணு மாற்றமாகி போய், உயிரிழந்து போன பாரம்பரிய தானியங்கள்.அனைவரையும் அழிக்க தயாராக உள்ள அணு ஆயுதங்கள் உலைகள். மன சாட்சியே இல்லாது பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட மருத்துவர்கள்.வளர்த்து விடப்படும் கேன்சர், மலட்டுத்தன்மை எபோலாவைரஸ் போன்ற
நோய்கள். இவைகளெல்லாம் நம்மையும் நம் சந்ததிகளையும் விழுங்க நெருங்கி விட்ட போதும் எந்த நம்பிக்கையில்
கோடிகளை சேர்க்கிறார்களோ?
இவையே கலியின் உச்சங்கள், மிஞ்சுமா மனித
இனம்...
நம் பாரம்பரிய சிறு தானியங்களை கூட மரபணு
மாற்றத்துக்கு உட்படுத்தியிருக்கிறான் வெள்ளையன்.
வெள்ளைக்கார வீண் ஞானியிடம் இருந்து கருவில் இருக்கும் சிசு கூட தப்ப முடியாது. அனைத்துக்கும் அடிப்படை காரணம் விஞ்ஞானமும் நம் ஆடம்பர சுகம் தேடும் ஆசையும், பண பேராசையும்தான். இறுதி தீர்வு நம் சித்தர்கள் கையில், ஆரம்பமாகி விட்டது சித்தர்கள் ராஜ்ஜியத்துக்கான திருப்பணி.
ஒன்றே குலம், ஒருவனே தேவன் .ஒரே ராஜ்ஜியம்.
சித்தர் பெருமான்களையே போற்றுவோம், அடி
பணிவோம், ஒன்றுக்கும் உதவாத சிற்ப வழிபாட்டினை விடுத்து மெய்ஞானம் அறிவோம் உண்மை கடவுளை ஆராய்ந்து அவனடிபணிவோம். காணாததை எல்லாம் கற்பனையில் வணங்குவதை விடுத்து நம்மோடு எப்போதும் வாழும் நம் உயிரை மட்டுமே
சரண் அடைவோம்.
என் உடலையும் அறிவையும் ஒளிமயமாக்கிய உயிராகிய கடவுளே, உன்னை நான் மனமார நேசிக்கிறேன். உன்னிடம் என் சரீரம் கூடி பெறாத இன்பத்தை மற்றவருடன் கூடி இன்பம்
யாசித்து அலைந்தேன். இத்தனை காலமும் துன்பப்பட்டேன்.
நிலையான இன்பம் ஏன்பது இறுதிவரை இல்லை என என் அறிவுக்கு புலப்படுத்திய தெய்வமே!
இன்பத்தின் ஆரம்பமும் விதியின் துவக்கமும் துன்பத்தில் முடிவு பெறும். இல்வாழ்க்கையில் இன்பம் என்பது கனவுகளும் கற்பனைகளும் ஆகி இறுதியில் துன்பமும் அழிவும் தந்து விடும்.
பெற்ற தாயும் தந்தையும் ஓதிய குருவும் ஆன தெய்வம் நீ.
உடலோடு உயிர் கலந்த வண்ணம் நீ. மது, மாது, பேராசை
தொலையவும் நலம் அருளிய பொதுவான தெய்வம் நீ.
உயிரிலிருந்து உடல் வந்ததை அறியார், உயிரிலிருந்து
இன்பம் அடைவதை அறியார், உயிர்தான் இன்பம் என சிறிதும்
உணரார். ஆவி என்பர், பேய் என்பர், பிசாசு என்பர் சைத்தான்
என்பர், ஆனால் தெய்வம் ஏது என்பதை ஒரு போதும்
அறியார்.உயிரிலிருந்து உடலை கழற்றி எறிய மட்டும்
கற்றுக்கொண்ட இவர்கள் உயிரின் உதாசீனத்தால் ஒன்றுக்கும்
உதவாது போய் விட்டார். உடலை உயிராக்கும் உன்னத
உயிர்கலை கற்ப்போம் கர்ப்ப கோடி ஆண்டுகள் உயிராகவே அழிவின்றி வாழ்ந்திடுவோம்.
மனதில் கர்ம வினை
“சம்மதம் உயிராலயம் செல் : 9442891174 & 9787407950”
FB Page : / sstsua
Web page : www.sammatham.com
#உயிரே #கடவுள் #Sammatham #Bohar #போகர் #சம்மதம் #SSTSUA #உயிராலயம் #சித்தர்கள்
அனைத்து நண்பர்களும் சித்தர்களின் ராஜ்ஜியம் KZitem சேனலை Subscribe செய்து எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
/ @sithargalinrajiyam
Негізгі бет உயிர் ஞான அருல் 3
Пікірлер: 3