#வேட்டைநாய் #வண்டன்பெரியசாமி #நாட்டுநாய்
4 தலைமுறைகளாக வேட்டை நாய் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் வேட்டை நாய் உயர்திரு. ஐயா வண்டன் பெரியசாமி குறித்த அனுபவ வீடியோ பதிவு. ஏற்கனவே இவரை எடுக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், அதற்கான வாய்ப்பு இப்பொழுதுதான் கிடைத்தது. இவரது மகன் ஹரி பாண்டியன் இந்த நேர்காணலுக்கான ஏற்பாட்டினை செய்து கொடுத்தார்.
மதுரையிலிருந்த வழக்கம் போல், இரு சக்கர வாகனத்தில், நானும் கேமரா தம்பியும் 5:30 மணிக்கு கிளம்பினோம். திருமங்கலம் வந்தடைய 6:30 மணி ஆகிவிட்டது. நான்கு வழிச்சாலை செம பயணம். குளிர்தான் எங்களை துவட்டி எடுத்துவிட்டது. 8 மணிக்கு கோவில்பட்டியை அடைந்துவிட்டோம். அங்கு பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு ஹோட்டலில் பொங்கல், பூ, மொச்சை கூட்டு என செம சாப்பாடு, நல்ல ருசி.
அதன் பிறகு அங்கிருந்து, கழுகு மலைக்கு என்று மேம்பை ஆரம்பித்தால், அது வழி மாறி வேறு ஒரு ரூட்டில் எங்களை கூட்டி சென்றுவிட்டது. கிராமத்து வழி. வளைஞ்சு, வளைஞ்சு மக்காச்சோளம், பருத்தி விவசாயம் அதை ரசித்துக் கொண்டே, கடைசியாக வண்டன்பெரியசாமி ஐயா வேட்டை நாய் பண்ணையை அடைந்துவிட்டோம்.
வழக்கம்போல் எல்லா பண்ணைகளிலும் வேட்டை நாய்கள் பார்த்ததும் குலைக்கும். அப்படித்தான் 35 இன்ஞ்ச் உயர்த்தில் பல நாய்கள் இருந்தன. எல்லாமே லொல்... லொல்... தம்பி வழக்கம்போல் அண்ணே என்ன இது பயங்கரமா இருக்கு என்று கூற, நான் அசால்டா உள்ளே நுழைந்தேன்.
அங்கிருந்த எந்த நாயும் எங்களை பார்த்து சிறிதும் பாசத்தை காட்டவில்லை, மாறாக தாக்கவே முனைப்பாக இருப்பது. பக்கத்தில் செல்ல எனக்கும் பயம் தொற்றிக் கொண்டது. அதற்குள் ஹரி பாண்டியன் வந்துவிட்டார். அதன் பிறகு வண்டன்பெரியசாமி ஐயா அவர்களும் மூன்று சாய்களை கையில் பிடித்துவிட்டு வந்துவிட்டார்கள்.
ஏன் இப்படி உங்கள் நாய் பழக மாட்டீக்குது என்று கேட்க, இதெல்லாம் வேட்டைக்கு மட்டுமே சென்ற நாய்கள். மனிதர்களோடு அதிகம் பழக விடுவதில்லை. வேற்று ஆட்களை கண்டால் பாய்ந்துவிடும். கட்டி போட்டிருப்பதால்தான் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் என்றனர். நான் அதையும் தாண்டி நாய்கள் பக்கத்தில் சென்று பாசத்துடன் அழைத்தேன். ஆனால் என் முயற்சிக்கு ஒரு நாய் மட்டுமே சம்மதம் அளித்தது. ஆனாலும் அது தொட அனுமதிக்கவில்லை. இது ஆச்சர்யமாக இருந்தது.
பிறகு வழக்கம்போல் பேட்டியை ஆரம்பித்து, இடையில் பசுமாட்டு தேனீர், கார பலகாரம் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் பேட்டியை தொடர்ந்து முடித்துவிட்டோம். வேறு ஒரு பணி இருந்த காரணத்தால் அங்கு நீண்ட நேரம் செலவு செய்ய முடியவில்லை. இறுதியாக ஐா வீட்டிற்குச் சென்று அங்கு நாய் கண்காட்சியில் பெற்ற பரிசு கோப்பைகள், பழைய புகைப்படங்கள் என ஒவ்வொன்றாக காண்பித்தார்.
ஐயாவுடன் சில நேரங்கள் பேசிவிட்டு, ஆன்மீக தரிசனம் முடித்துவிட்டு வாழைப்பழம், பேரிச்சம் பழம் என இனிப்பை சுவைத்துவிட்டு, அவசரம் என்பதால் கிளம்பினோம். ஐயாவும், தம்பி ஹரிபாண்டியனும் எவ்வளவோ சாப்பிடக் கேட்டுக் கொண்டும், காலையில் சாப்பிட்ட செம சாப்பாடும், பலகாரங்களும் எங்கள் வயிற்றில் இருந்த காரணத்தால், இன்னொரு நாள் நிச்சயமாக வருகின்றோம் என்று அன்புன் விடைபெற்றோம்.
மீண்டும் இந்த முறை சரியான வழியில் கழுகு மலையை கண்களிர் ரசித்தப்படி, அங்கிருந்து மதுரை திருநகருக்கு 3 மணிக்கு வந்தடைந்தோம். 300 கிலோ மீட்டர் பயணம் என்பதால் அசத்தியே விட்டது. தம்பி அதன் பிறகும் வேறு ஒரு சூட்டிங் போன க(வ)தை உண்டு.
அந்த நாய்கள் உடம்பு முழுக்க கொசுக் கடித்து இருந்தது. மூட்டம் போட்டாலும் போக மாட்டிக்குது அண்ணே என்று ஹரி பாண்டியன் தம்பி சொன்னது மட்டும் நினைவில் வந்து வந்து போனது. இதற்கு ஏதாவது சரியான வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று...
வேறு ஒரு பயண அனுபவத்துடன் உங்களை சந்திக்கின்றேன். நன்றி வணக்கம்.
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh - 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
💓 App Link: play.google.co...
💓Online Web Tv : hellomaduraitv...
💓 Facebook : / hellomaduraitv
💓 Hello Madurai News website : hellomadurai.in/
💓 Agri News website : tamilvivasayam...
💓 Amma Samaiyal Food website : ammasamaiyal.com/
💓 Telegrame Link: t.me/hellomadurai
_________________________________________________________
Негізгі бет வேட்டை நாய் வளர்ப்பில் நான்கு தலைமுறை | வண்டன் பெரியசாமி ஐயா | Hello Madurai
Пікірлер: 76