படிக்காசு அருளிய வரலாறு :
கும்பகோணம் அருகில் உள்ள திருவீழிமிழலையில் நாவுக்கரசரும் சம்பந்தரும் வரும்போது அங்கு கடும் பஞ்சம் நிலவியது. உண்ண உணவின்றி அந்த ஊர் மக்கள் பெரிதும் துன்புற்றனர்.
இதை அறிந்த இருவரும் வீழிநாதேஸ்வரர் நினைத்து பதிகம் பாடினார்கள். அப்போது அவர்களுக்கு காட்சி தந்து; தினமும் இருவருக்கும் படிக்காசு பலிபீடத்தில் இருக்கும், அதை வைத்து அன்னதானம் செய்து அடியவர்களின் பசியை போக்கும் படி கூறினார். அதன்படி கிழக்கு பீடத்தில் உள்ள காசை சம்பந்தரும், மேற்க்கு பீடத்தில் உள்ள காசை திருநாவுக்கரசரும் எடுத்துக்கொண்டு அடியார்களின் பசி போக்கினார்கள்.
இங்கு தான் ஈசன் திருவிளையாடல் புரிந்தார் திருநாவுக்கரசருக்கு கொடுத்த படிக்காசு எந்த குறையும் இல்லாமல் இருந்ததால் சமையல் செய்ய அனைத்து பொருட்களும் கடையில் வாங்கப்பட்டது, விரைவாகவே அடியார்களுக்கு மடத்தில் உணவு வழங்கப்பட்டது.
ஆனால் சம்பந்தருக்கு பீடத்தில் இருந்த காசு வேறுபாடு கொண்ட காசாக இருந்தது அப்போ அந்த காலத்தில் அந்த காசுக்கு அரசிடம் தெரிவித்து அதற்கான வரியை கட்டிய பிறகே பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் இருந்தது. (தற்போது டாலரை இந்திய பணமாக மாற்றும் முறை) அதனால் அதில் கால தாமதம் ஏற்படும் என்பதால் இறைவ னிடத்தில் "வாசி தீரவே காசு நல்குவீர்" என்று கேட்டார்.
Негізгі бет வறுமை நீங்க| கடன் சுமை குறைய| தொழிலில் லாபம் பெறுக|வாசி தீரவே | Vasi Therave | WITH LYRICS & MEANING
Пікірлер: 46