சார் இப்பத்தான் தங்களின் பரதநாட்டிய இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இறுதியாய் அக்ரே பஷ்யாமினீறீங்களே...அமப்டின்னா என்ன அர்த்தம்னு கூகுள்ல தேடினேன்.... தங்களைக் குறித்துதான் போட்டிருந்தது...அது நாராயணியமாம் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு தாங்கள் வைத்த பெயராம்...😊💐💐🙏🙏
@krishna2240
Жыл бұрын
அவர் பிறந்த காலத்தில் பூதனையாக பிறந்திருந்தால் கூட வரம்தான் போங்க.... கோபிகையாகத்தான் பிறக்கலேன்னாலும்...ஒரு பூதனையாக பிறக்க கூட தகுதியில்லாமல் போய்ட்டனேன்னு வருந்தற அளவுக்கு பூதனா வதம் சொல்றீங்க....சந்தன வாசம் ஜவ்வாது வாசனை லாம் வரும்னா பூதனையாக பிறப்பதுகூட வரம்தானேங்க....😊🙏🙏
@lakshmikesavan5044
2 жыл бұрын
Hari om Guruji
@kannanannamalai7356
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@krishna2240
Жыл бұрын
சார் ...கேசாதி பாதம் வரை விக்ரஹ ரூபமாய் ரசித்துப் பாடலெல்லாம் இருக்கும் பட்சத்தில்...இறைவனை தனீஉளீளே காண்பதுதான் முழுமையான பக்தி...இந்த பூஜை புனஸ்காரம் வழிபாடு அனைத்தும் மனம் தன்னுள் இறைவனைக்காண நிலையென்கின்றனரே...அது எப்படி ,எதனால் ,ஏன்....??
@krishna2240
Жыл бұрын
எனது அக்கா எனக்கு போன் பண்ணுவாங்க...இன்று புரட்டாசி சனிக்கிழமை அல்லவாக்கா எனக்கு மாவிளக்கு போடணும் வேலையிருக்கு பூஜை முடித்ததும் பேசவான்னு வச்சிடுவேன்.....பூஜை முடித்ததும் அழைத்துப் பேசினால் இவ்ளோ நேரமா பூஜையா பண்ணினேன்னுவாங்க...ஆமாக்கா பலகாரம்லாம் பண்ணுவேன்...கோவிந்த நாமம் கூறுவேன் நேரமாகிடும்ணுவேன்....பூஜை அறையை போட்டோ எடுத்து அனுப்பினேன்....அப்போ அவங்கதான் சொல்லிட்டாங்க....கடவுள் நம் இதயத்துள்ளேயே இருக்கார்னு உணர்றப்போ நீ இதில் எதையுமே செய்ய மாட்டே...இதெல்லாம் வேஸ்ட்டுன்னு உனக்கே புரிஞ்சிடும்னு....நாலு நாள் முன்னே நீங்க கூட தங்களுக்கு கிடைத்த பலாப்பழத்தில் பெருமாளுக்கு அலவா பண்ணியிருக்கீங்க...அப்போ உங்களுக்கு இதயத்துள் இன்னும் ஒளி ரூபமாய் பெருமாள் வரலேன்னா அரத்தம்....அப்படியே வச்சிகிட்டாலும்...அவங்க போனை அட்டன் பண்ணியிருந்தா உருப்படாத நாலு காரியத்தை உருகி உருகி பேசியிருப்போம் அவ்வளவுதானே...இங்கே பெருமாளுக்காய் மாவிளக்கு போட்டு...அதில் வேறு நான் ஒரு சவரன்ல ஒரு லஷ்மி கோல்ட் காய்ன்ஸ் வச்சிருக்கேன் ...அதை இதுதான் பெருமாளோட மார்பு எனக் கருதி அம்மலையின் இடப்புறம் அந்த காயின்ஸை பதித்து வைத்து அந்த லஷ்மிக்கு குங்குமம் இட்டு...அப்படியெல்லாம் ரசித்து ரசித்து செய்வேன் சார்....துளசி சாற்றி ...அக்கார வடிசல்ன்ற பெயரில் எதையோ பண்ணி சமர்ப்பிச்சிருக்கேன்...உன்னி அப்பம்ன்னா என்னான்னு யூடியூப்பில் தேடிப்பார்த்து...அதையும் பண்ணியிருக்கேன்...வெண்ணெய் , சிறுபயிறு , பானகம் ,உளுந்தவடை கூட பண்ணுவேன் சார்....ஆஞ்சநேயர்க்கு வேணும்ல...அதும் பூராவும் நல்லெண்ணெய்லவே ...சில வாரங்களில் ஏதாவது ஒரு சாதமும்.கூட....ஶ்ரீநாவாசா கோவிந்தா பாடலை ஓடவிட்டு கூடவே சேர்ந்து பாடிப்பேன்....அதான் நேரமாகுமே...இடையில் டீ கேட்கும் கணவருக்கே கூட....பூஜை முடியும் வரை டீ தேன்சல்...மீறி வற்புறுத்தினா வரதட்சணை கொடுமைன்னு கேஸ் கொடுப்பேன்னு மிரட்டி வச்சிருக்க....இவங்ககிட்டே பேசலேன்னு...இதெல்லாம் வேஸ்ட்டுன்றாங்க....உனக்கு மனசு இன்னும் பக்குவமே படலேன்றாங்க....நாலு நாள் முன்னேதான்...அப்பாடான்னு ஆச்சு...தூஷ்யந்த் ஶ்ரீதர் அவங்களே பெருமாளுக்கு பலாப்பழ அல்வா பண்ணித்தராங்க...அவங்களுக்கே இன்னும் மனசு பக்குவப்படல போல...நமக்கு ஒரு நாலு ஜென்மா கழிச்சே பக்குவப்பட்டுட்டு போகட்டும்னு.....😀😀🙏
@krishna2240
Жыл бұрын
மெய்யாலுமா...நான் இப்பத்தான் கண்கள் தெளிவா தெரியணும்னு மை தீட்டறேன்...என்னோட அப்பாவோட அம்மால்ல அவங்க தனது நகைகளை கழட்டி ஒரு சொம்பில் வைத்து பூமிக்குள் புதைச்சிட்டாங்க...எனது அப்பாதான் கடைசி பையன்றதால் பாட்டி வாழ்ந்த வீடு எங்களுக்கே...அம்மாவின் யூகமோ கற்பனையோ தெரியாது அந்த நகை இங்கே ஜொலித்தது அங்கே ஜொலித்ததென கிச்சன்ல சில இடங்களை சுட்டிக் காட்டுவாங்க...அதை நம்பி வீட்டின் தரையை உடைத்துப் பதையலைத் தேடும் அளவிற்கு வசதி வாய்ப்பு இல்லை...தரையை உடைத்தபின் பதையல் கிடைக்கலேன்னா பூசற செலவுக்கு எங்கே போக...😀😀 இப்போதெல்லாம் அம்மா சொல்லிப்பாங்க எனது தம்பி பூமியைப் பார்த்துப் பிறந்தானாம் அவனுக்கே அப்புதையல் தென்படுமாம் அவனுக்கு கிடைக்குமாம்....அந்தப் புதையல் ஏன் அங்குமிங்கும் சென்றது எனக்கேட்டால்...பூதம் காவலிருக்கும் என்றார்கள்....சரி...பாட்டி ஏன் எட்டு குழந்தைங்க இருக்கறப்போ அவங்களுக்குத் தராமல் புதைச்சு வச்சாங்க எனக்கேட்டேன்....பாட்டிக்கு கடைசி காலத்தில் யாருமே சாப்பாடு போடல அந்தக் கோபம்ன்னாங்க...அப்பா கூடவா என்றேன்...அப்பா இலங்கையில் அப்பா அனுப்பிய பணத்தை பெரியப்பா வாங்கினார் அவர் ஆச்சி தாத்தாவுக்கு தரல...தாத்தா ஒருமுறை பசியில் பெரியப்பாவிடம் சுட்ட பனம்பழம் கேட்டாங்களாம்...பெரியப்பா இந்தாப்பிடியென்று மண்ணில் வீசினாங்களாம்....இரண்டு பெரியப்பா மட்டுமே ஊரில் அப்பாவோடு மற்ற இரு பெரியப்பாக்கள் இலங்கையில்...அத்தைமார்கள் திருமணமாகி ...ஆக ஆச்சியும் தாத்தாவும் பசியும் பட்டினியுமாய் இறந்ததாக....அப்போ ஆச்சியோட அந்த நகையில் நமக்கு என்ன உரிமையுள்ளது ஆசையுள்ளது...ஆக அது நம் கைக்கு கிடைக்கத் தேவையே இல்லையே என்றேன்.... அப்பா எப்பவும் என்னைத்தான் ஆச்சியின் சாயல்னுவாங்க....அதற்காகவே ஒரு பல் தூக்கியபோது கூட க்ளிப் போட விடல...எனது அம்மாவைப் பார்த்தாற் போலவே இருக்குன்னு சொல்லி...ஆக அம்மாவிடம் போய் நான்தான் உன் மாமியார்...எனது நகையில் நீ ஆசைப்படாதே ராமபூவதி என்பேன்....சமீபத்தில் ஓர் பதிவில் படிச்சேன்...புதையல் என்பது பல ஆண்டுகள் கழித்தேனும் புதைத்தவர் கைக்கே வந்து சேருமாம்.... எனக்கு ஷாக்காகிடுச்சு... எனது அம்மா தனது இளம் வயதில் தனது பெரியம்மா வீட்டு திருவிழாவுக்கு வந்தப்போ....திருவிழா நடக்கும் இடத்தருகே ஒரு வீட்டினில் மரணம் நிகழ்ந்துவிட்டதென திருவிழாவை நிறுத்திவைத்து....அந்த உடலை உடனே நல்லடக்கம் செய்துவிடக் கூறினராம்...அம்மா சிறுவயது ஆர்வக்கோளாறில் போய் எட்டிப்பார்த்தாங்களாம்....பின்னாளில் மருமகளாய் வாழப்போகும் வீடு என அறியாமலே.... மரணம் எனது அப்பாவின் அப்பா.....ஆக எனது அப்பாவின் திருமணத்திற்கு முன்பே மரணித்துப் போன.. எனது .யோகஞானவடிவு பாட்டியை கெஞ்சி வேண்டினேன்...பாட்டி இந்த அற்ப புதையலுக்காக...நீ பசியும் பட்டினியுமாய் கஞ்சிக்கு வழியின்றி இறந்து போன இவ்வூரில் மீண்டும் நீயும் தாத்தாவும் வ்நது பிறந்த விடாதே...உனக்கு அந்தப் பாழாய்ப்போன புதையல் வேண்டவே வேண்டாமென்று....
@krishna2240
Жыл бұрын
சார் நானு இங்கே கேட்டதை வைத்து ஶ்ரீவில்லிபுத்தூர் சென்றபோது...சாமி பேருக்கே அர்ச்சனை பண்ணலாமேன்னு சொன்னதற்கு...அக்கோவில் பட்டர்தான் இல்லேம்மா உங்க பொண்ணோட பெயரும் நட்சத்திரமும் சொல்லுங்க...அப்ரம் பேம்லி மெம்பர்ஸ் பெயர் நட்சத்திரய் தெரிஞ்சா சொல்லுங்க இல்லேன்னா விடுங்கன்னாங்க....அத்தோடு கையில் தட்சணைக்காக 150ருபாய் வைத்திருந்தேன் நான் நூறு பொண்ணு ஐம்பது என ஆரத்தி கொண்டு வந்தவர் தட்டிலும் வச்சிட்டேன்தான்...ஜிப்பை திறக்கல கேரி பேக்கை உருட்டத் தேவையில்லே ஏன்னா குங்கும பிரசாதம் வைத்திட கிளி வாங்கிய இடத்திலேயே பேப்பர் கவர் தந்திருந்தாங்க....ஆனால் கிளியைக் கொண்டு தந்த பட்டர் இருநூறு ருபாய் தட்சணை வைத்துத் தாங்கன்னு கேட்டாரே....இது குறித்து எனக்கு முன்னரே தெரியாதே...நீங்க ஆண்கள் ...ஆக சர்ட் பாக்கெட்ல இருந்து சட்டென்று எடுத்து தந்திடலாம் ...நான் வேறென்ன செய்ய கையிலிருந்த மாலையை கிளியை பொண்ணு கையில் தந்துட்டு ...குங்கும துளசி பிரசாதங்கள் வேறு கைதனில்...அவைகள் கொட்டாதவாறு...ஆக அக்கப்போர் பண்ணி ஜிப்பை திறந்து...ஆண்டாள்தான் என்னையே பரிதாபமாய் பார்த்திருக்க கூடும்...எனக்கு எங்கே ஆண்டாளைப் பார்க்க நேரம் என்பதாய் நான் கைப்பையோடு மல்லுகட்டி...ஆக அப்போதான் யோசிச்சேன்ங்க அடுத்தமுறை ஒரு ஐநூறு ருபாய்க்கு சில்லரை கையிலேயே வச்சிக்கணும்னு ...பெண்கள் பாடு கொஞ்சம் சிரமம்தான் சார்..ஆண்கள் மற்றும் குழந்தைகள் வாங்கும் பிரசாதத்தினைக் கூட பெண்கள் (அம்மா ,மனைவி)கையில் தந்துடுவீங்க....😊🙏🙏
@krishna2240
Жыл бұрын
நான் எடுத்துட்டேன் சார்...திவ்ய பிரபந்த புக்ஸை...திருமணமான புதிதில் வாங்கினேன்...வாசிச்சுப் பார்த்தேன் அர்த்தம் புரியல....இத்தனை ஆண்டுகள் கழித்து இப்பத்தான் ....தங்கள் தயவால் படிக்கப் போறேன்னு நினைக்கிறேன்.... பகவத்கீதைகூட இருக்கு சார்...அது இந்து முன்னி தலைவர் ஒருவர் திருமண அன்பளிப்பாய் தந்தார்...அதில் ஹிந்தி மாதிரியான எழுத்தெல்லாம் இருக்கு சார்...தமிழிலும் எழுதி இருக்கு...அதும் இதேமாதிரி ...அதும் புரியல... ஸ்ரீமதே ராமாதுஜாய நம: அமலனாதிபிரான் தனியன்கள் பெரிய நம்பிகள் அருளியது ஆபாத சூடமநுபூய ஹரிம்ாயாதம் மத்த்யேகவேர துஹிதுர்முதிதாந்தராத்மா அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம் யோ நிற்சிகாயமநவைமுநிவாஹந்தம். திருமலை நம்பிகள் அருளியது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் காட்டவே கண்ட பாத கமலம்நல் லாடை யுந்தி, தேட்டரு முதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய், வாட்டமில் கண்கள் மேனி முனயேறித் தனிபு குந்து, பாட்டினால் கண்டு வாழும் பாணர்தாள் பரவி னோமே.
Пікірлер: 20