ஸ்ரீ ஸுப்ரமண்ய த்யானம் - ஆவினன்குடி ஓரத்திலே..தொண்டிக்குளம் ஸ்ரீ ராமு பாகவதர் - ஆலங்குடி ராதாகல்யாணம்
விருத்தம்:
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
முருகா முருகா..
பாடல்:
ஆவினன்குடி ஓரத்திலே காவடிகள் ஆடுது
திருஆவினன்குடி ஓரத்திலே காவடிகள் ஆடுது
காவலனின் பாதத்திலே காவேரியார் ஓடுது
தமிழ் காவலனின் பாதத்திலே காவேரியார் ஓடுது
தங்கநிற பழனியிலே பங்குனித்தேர் ஓடுது அங்கே
பொங்கி வரும் அன்பர் கூட்டம் தங்ககடல் ஆனது
சித்தர்களும் வாழ்ந்திருக்கும் சக்தி கொண்ட பழனி அந்த
உத்திரத்தில் முருகன் வந்தான் பத்து மாச பவனி (ஆவினன்)
சஞ்சீவி தென்றலினால் சக்தியெல்லாம் கூடுது அங்கே
சாத்தும் பனி சந்தனத்தால் சர்வ பிணி ஓடுது
கந்தனையே சிந்தனை செய் நன்மையெல்லாம் கூடும் சிவ
மைந்தனையே வந்தனை செய் வளங்கலெல்லாம் கூடும் (ஆவினன்)
• 171 - Avinangudi Orath...
Alangudi Namasankeerthana Trust
rkraman - 9444922848
Негізгі бет Музыка 171 - Avinangudi Orathile Kavadigal | Thondikulam Sri Ramu Bhagavathar | Alangudi Radhakalyanam 2019
Пікірлер: 10