அகத்திய மாமுனி காலத்தைக் கடந்த,காலத்தை வென்ற ஒரு மாமுனிவர்....
தமிழர்களுக்கு மிகவும் பிடித்த மஹரிஷி அகத்தியர். முருகனிடமிருந்து தமிழைப் பெற்று அதற்கு இலக்கணமெல்லாம் வகுத்து தமிழைத் தமிழருக்குத் தந்த மஹரிஷி அகஸ்தியர். இவரைப் பற்றிய ஏராளமான சுவையான கதைகள் ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களிலும் பதினெட்டு புராணங்களிலும் காணலாம்.
ராமருக்கு ஆதித்ய ஹ்ருதயத்தை உபதேசித்தவர்.ஹயக்ரீவரிடமிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தைப் பெற்றவர். சரஸ்வதி ஸ்தோத்திரத்தை இயற்றியவர். இவரது மனைவி லோபாமுத்ரை அம்பாளின் மிக நெருங்கிய பக்தை.
அகஸ்தியர் ஞானம் 1
1. சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு:
பத்தியினா லறிந்தவர்கள் புண்ணியோர்கள் பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு:
பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார் பாழிலே மனத்தை விடார் பரம ஞானி:
கத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம் சுழியிலே நிலையறிந்தால் மோட்சந்தானே.
2. மோட்சமது பெறுவ தற்குச் சூட்சஞ் சொன்னேன் மோகமுடன் பொய் களவு கொலைசெய் யாதே:
காய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப் போடு: காசியினியிற் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு:
பாய்ச்சலது பாயாதே: பாழ்போ காதே: பலவேத சாஸ்திரமும் பாரு பாரு:
ஏச்சலில்லா தவர் பிழைக்கச் செய்த மார்க்கம் என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே
3. பாரப்பா நால்வேதம் நாலும் பாரு: பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி:
வீரப்பா ஒன்றொன்றுக்கு ஒன்றை மாறி வீணிலே யவர் பிழைக்கச் செய்த மார்க்கம்:
தேரப்பா தெருத்தெருவே புலம்பு வார்கள் தெய்வநிலை ஒருவருமே காணார் காணார்:
ஆரப்பா நிலைநிற்கப் போறா ரையோ! ஆச்சரியங் கோடியிலே யொருவன் தானே!
4. ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும் உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்;
பருவமதிற் சேறுபயிர் செய்ய வேணும் பாழிலே மனத்தை விடான் பரம ஞானி:
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி: தேசத்திற் கள்ளரப்பா கோடா கோடி:
வருவார்க ளப்பனே அனேகங் கோடி: வார்த்தையினால் பசப்புவார் திருடா தானே.
5. தானென்ற தானேதா னொன்றே தெய்வம்: தகப்பனுந் தாயுமங்கே புணரும்போது
நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த நாதனைநீ எந்நாளும் வணங்கி நில்லு;
கோனென்ற திருடனுக்குந் தெரியு மப்பா கோடானு கோடியிலே யொருவனுண்டு:
ஏனென்றே மனத்தாலே யறிய வேணும் என்மாக்கள் நிலைநிற்க மோட்சந் தானே.
6. மோட்சமது பெறுவதற்குச் சூட்சங் கேளு: முன்செய்த பேர்களுடன் குறியைக் கேளு!
ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு: எல்லாருங் கூடழிந்த தெங்கே கேளு:
பேச்சலது மாய்கையப்பா வொன்றுமில்லை: பிதற்றுவா ரவரவரும் நிலையுங்காணார்:
கூச்சலது பாளையந்தான் போகும் போது கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத் தானே.
7. மூச்சொடுங்கிப் போனவிடம் ஆருங் காணார்: மோட்சத்தின் நரகாதி யிருப்புங் காணார்.
வாச்சென்றே வந்தவழி யேற்றங் காணார்: வளிமாறி நிற்குமணி வழியுங் காணார்:
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய்ப் பாரு, வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே:
ஆச்சப்பா கருவுதனில் அமைத்தாற் போலாம்: அவனுக்கே தெரியுமல்லா லறிவாய்ப் பாரே.
8. பாரப்பா வுலகுதனிற் பிறவி கோடி: படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி:
வீரப்பா அண்டத்திற் பிறவி கோடி: வெளியிலே யாடுதப்பா வுற்றுப் பாரு:
ஆரப்பா அணுவெளியி லுள்ள நீதான் ஆச்சரியம் புழுக்கூடு வலைமோ தப்பா
கூரப்பா அண்டத்திற் பிண்ட மாகும் குணவியவா னானக்காற் சத்திய மாமே.
9. சத்தியமே வேணுமடா மனித னானால் சண்டாளஞ் செய்யாதே தவறிடாதே:
நித்தியகர் மம்விடாதே நேமம் விட்டு நிட்டையுடன் சமாதிவிட்டு நிலைபே ராதே:
புத்திகெட்டுத் திரியாதே: பொய்சொல்லாதே: புண்ணியத்தை மறவாதே: பூசல் கொண்டு
கத்தியதோர் சள்ளியிட்டுத் தர்க்கி யாதே கர்மியென்று நடவாதே கதிர்தான் முற்றே.
Негізгі бет அகஸ்தியர் ஞானம் 1
Пікірлер: 45