தேவாரப்பாடல் பெற்றசிவாலயங்கள்
சூட்சுமபுரீஸ்வரர் கோயில்
செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம்
செறுகுடி திருச்சிறுகுடி (123/274)
செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான மிகச்சிறந்த தலம். செவ்வாய் தனிச்சந்நிதியில் தனிச்சிறப்புடன் அருள்பாலிக்கிறார். சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் இத்தலம் 60 வது தலமாகப் போற்றப்படுகிறது. அம்பிகை கைப்பிடியளவு மணலால் சிவனாரை அமைத்து , மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட தலம்.
மூலவர்: சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்.
அம்பாள்: மங்கள நாயகி.
தல விருட்சம்: வில்வம்.
தல தீர்த்தம்: மங்கள தீர்த்தம்.
புராண பெயர்: திருச்சிறுகுடி
தற்போதைய பெயர்: செருகுடி
மாவட்டம்: திருவாரூர்
மாநிலம்: தமிழ்நாடு
பாடியவர்கள்: சம்பந்தர்
கோவில் அமைப்பு
தல ஆலயத்துக்கு செல்லும்போது, முதலில் மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கியவாறு உள்ளது. வாயிலின் உள்ளே சென்றதும், பலிபீடம் உள்ளது. அடுத்ததாக நந்தி தேவர் தரிசனம். இவ்வாலயத்தில் கொடிமரம் இல்லை. வெளிப் பிரகாரத்தில் மங்களவிநாயகர் உள்ளார். அடுத்ததாக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதி. முன் மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது. அந்த நவக்கிரகங்களில் சனீஸ்வரனுக்கு கீழே சனைச்சரன் என்று எழுதப்பட்டுள்ளது. இதுதான் சனீஸ்வரரின் சரியான பெயர் ஆகும்.
நவக்கிரக சந்நிதி அடுத்ததாக இடுப்பில் அரைஞாணக் கயிற்றுடனும், கழுத்து மாலை அணிந்தும் நம் திருஞானசம்பந்தர் திருமேனி கொண்டு நின்றிருந்தார்.
அடுத்து முன் மண்டபத்திற்கு சென்றால், அங்கு தெற்கு நோக்கிய வண்ணம் அம்மை மங்களநாயகி சந்நிதி உள்ளது. அவள், அபயவரதத்துடன் நின்ற திருக்கோலத்துடன் காட்சி தந்தாள்.
இத்தலத்தில் அம்பாளுக்குத் தான் அபிஷேகம் நடை
பெறுமாம். சுவாமிக்கு இல்லையாம். காரணம், இறைவன் மணலாலான சுயம்புத் திருமேனி. அதனால் அவருக்கு அபிஷேகம் இல்லையென அருகிருந்தோர் கூறினர்.
நேரே மூலவர் சூட்சுமபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது.
சிறுகுடியீசர் என்ற பெயருக்கேற்றவாறு மிகச் சிறிய லிங்கமாக. ஒருபிடி அளவேயுள்ள மணலாலாண லிங்கமாக இருப்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாதாம்.
லிங்க நெற்றியில் பள்ளமும் மற்றும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் மணல்சுயம்புத் திருமேனியில் உள்ளது.
அம்பிகை இறைவனை ஆலிங்கனம் செய்து கொண்டதால் இத்தழும்புகள் உண்டானது என்று அதே பக்தர் கூறினார். சற்று உற்று வணங்கிய போதுதான் தெரிந்தது. லிங்கத் திருமேனியில் கவசம் சாத்தியே வைக்கப்பட்டிருந்ததைக் காணலாம்.
அடுத்ததாக கருவறையின் தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியை காணலாம்.மேற்கு கோஷ்டத்தில் மகாவிஷ்ணு, இருக்கிறார்.வடக்கு கோஷ்டத்தில் வலம் வருகையில் அங்கே பிரம்மாவை காணலாம்.
அடுத்திருக்கும் சந்நிதியில் சண்டிகேஸ்வரர் சன்னதி.
கருவறைச் சுற்றில் மங்கள விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர் சந்நிதி ஆகியோரும் சந்நிதி கொண்டுள்ளனர். இங்கு உள்ள உற்சவ மூர்த்திகளுள் சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி சிறப்பானதாம். அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள் மீது ஈசன் கை போட்டுக் கொண்டு, இறைவன் காட்சி தருவது, பக்திப்பாங்குடன் பார்க்க வேண்டிய அழகாகும்.
இத்திருத்தலத்தில் செவ்வாய் பகவான் இறைவனை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் அங்காரகனுக்கு தனி சந்நிதி உள்ளது. செவ்வாய் தோஷமுடையவர்கள், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அங்காரகதோஷம் நிவர்த்தியாகிறது.
இத்தலத்தில் தீர்த்தமாடி ஈசனை வழிபட செவ்வாய் தோஷங்கள் விலகிவிட்டதாக பக்தர்களின் நம்பிக்கை.
தலவரலாறு
ஒருமுறை கைலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில பார்வதி வெற்றி பெற்றாள். அதனால் வெட்கமடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார்.
கலக்கமடைந்த பார்வதி சிறுகுடி தலத்திற்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதைச் சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்டாள்.
சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து அவளை மீண்டும் ஏற்றுக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது.
பிராத்தனை
அங்காரகனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க பூஜித்து வரம் பெற்ற தலமாதலால், இக்கோயிலில் உள்ள அங்காரகனை தரிசனம் செய்பவர்களுக்கு செவ்வாய் தோஷம், திருமணத் தடை நீங்கும் என்றும் , பலவித நோய்கள் தீரும் என்ற வரலாறும் சொல்லப்படுகிறது. அங்காரகனை தரிசனம் செய்ய மாசி மாதம் செவ்வாய் கிழமைகள் ஏற்றது. இந்நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கும். வில்வ இலை, மங்கள நீர் (குளத்து நீர்) ஆகியவை கொண்டு செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது.
திருவிழா
மாசியில் ஏகதின உற்சவமும் , மாசிமாத நான்கு செவ்வாய் கிழமைகளிலும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன . மார்கழி ஆதிரையும் பிரசித்தி பெற்றது. பங்குனி உத்திரம் நட்சத்திரம் வரும் நாளில் சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.
ஆலயமுகவரி
அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில்,
சிறுகுடி,
சரபோஜிராஜபுரம் அஞ்சல்,
(வழி) பூந்தோட்டம்,
குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்.
PIN - 609 503
கோயில் Google map link
maps.google.com/?cid=45114987...
கோயில் அர்ச்சகர் தொலைபேசி எண்
9381044986
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
அமைவிடம்
கும்பகோணம் - நாச்சியார்கோவில் - கூந்தலூர் - பூந்தோட்டம் சாலையில் கூந்தலூர் கடந்து கடகம்பாடியை அடைந்து அங்கிருந்து வடக்கே அரசலாற்றுப் பாலம் தாண்டி சுமார் மூன்று கி. மி. தொலைவில் சிறுகுடி தலம் இருக்கிறது. நாச்சியார் கோயிலில் இருந்து எரவாஞ்சேரி வழியாக கடகம்பாடி அடைந்து அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள செறுகுடி செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
if you want to support us via UPI id
k.navaneethan83@ybl
Join this channel to get access to perks:
/ @mathina
- தமிழ்
Негізгі бет செறுகுடி சூட்சமபுரீஸ்வரர் கோயில் | செவ்வாய் பரிகார தலம் | பதவி உயர்வு கிடைக்க வழிபட வேண்டிய தலம்
Пікірлер: 12