#கந்தன் #முருகன் #அருணகிரிநாதர் #Kanthan #Murugan #Thirumurai #Arunagirinathar #சீர்காழி #கோவிந்தராஜன்
தொகுப்பு: கந்தர் அலங்காரம்
அருளியவர்: அருணகிரிநாதர்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
பாடல் 70 ... விழிக்குத் துணை
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
......... சொற்பிரிவு .........
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
......... பதவுரை .........
நமது கண்களுக்குத் துணையாவது திருமுருகப்பெருமானது
புனிதமானவையும் மென்மையானவையுமான செந்தாமரை மலர்
போன்ற திருவடிகளேயாகும். உண்மையில் ஒருசிறிதும் குறையாத
சொல்லுக்குத் துணையாவது 'முருகா' என்று கூறும் அப்பரமபதியின்
திருநாமங்களேயாகும். முன்பு செய்த பழியைத் தருகின்ற
பாவத்தை அகற்றுவதற்குத் துணையாவது திருமுருகப்பெருமானின்
பன்னிரண்டு புயங்களுமேயாகும். அஞ்சுந்தன்மையுடைய
தனிமையான வழிக்குத் துணையாவது திருச்செங்கோட்டில்
எழுந்தருளியுள்ள கந்தப்பெருமானுடைய கூர்மையான
வேலாயுதமும் மயிலுமேயாகும்.
-
பாடல் வரிகள், பொருள்:
www.kaumaram.com/alangkaram/a...
கந்தர் அலங்காரம் playlist in our channel:
• கந்தர் அலங்காரம்
நன்றி!!!
Негізгі бет கந்தர் அலங்காரம் | 70 விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் | அருணகிரிநாதர்
Пікірлер: 1