#கந்தன் #முருகன் #அருணகிரிநாதர் #Kanthan #Murugan #Thirumurai #Arunagirinathar #சீர்காழி #கோவிந்தராஜன்
தொகுப்பு: கந்தர் அலங்காரம்
அருளியவர்: அருணகிரிநாதர்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
பாடல் 72 ... சேந்தனைக் கந்தனை
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
......... சொற்பிரிவு .........
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச்
சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.
......... பதவுரை .........
சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை,
திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த
வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும்படி செய்பவரை,
விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த
கடப்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப்
பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக
உடையவரை, உயிர் பிரியும்வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு
குறையும் உண்டாகாது.
பாடல் வரிகள், பொருள்:
www.kaumaram.com/alangkaram/a...
கந்தர் அலங்காரம் playlist in our channel:
• கந்தர் அலங்காரம்
நன்றி!!!
Негізгі бет கந்தர் அலங்காரம் | 72 சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை | அருணகிரிநாதர்
Пікірлер: 2