நாளென் செய்யும் வினைதான் என் செய்யும் | அருணகிரிநாதர் | MURUGAN DEVOTIONAL SONGS
நாளென் செயும் வினைதான் என் செயும் | அருணகிரிநாதர் | பாடல் வரிகளுடன் | LORD MURUGAN SONG
#youtubeshorts #whatsappstatus #viral #youtube #trending #murugan #songs #tamil
#அருணகிரிநாதர்
#தமிழ்
#கந்தரலங்காரம்
#கந்தரலங்காரம் #அருணகிரிநாதர் #தமிழ்
பாடல்: நாள் என் செயும்
பாடல் தொகுப்பு: கந்தரலங்காரம்
அருளியவர்: அருணகிரிநாதர்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
பாடல் 38 ... நாள் என் செயும்
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
......... சொற்பிரிவு .........
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
......... பதவுரை .........
நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய
இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.
Негізгі бет நாளென் செய்யும் வினைதான் என் செய்யும் | அருணகிரிநாதர் | MURUGAN DEVOTIONAL SONGS
Пікірлер: 15