நற்கருணையிலே எழுபவரே ஆராதனை புரிவோம்...
என் அருகினிலே வருபவரே ஆராதனை புரிவோம்...
வருக வருக என்று அழைக்கும்
மனதில் வந்து
அமர்ந்து அமர்ந்து
அன்பை பொழிபவரே...
நினைவு முழுதும் அன்பில்
நனைந்து நனைந்து உம்மை முழுதும் நினைந்திருக்க அழைப்பவரே..
உமது அருகில் இருந்தால்
கவலை மனதில் இல்லையே..
உமது உறவில் இருந்தால் மனது மகிழ்ந்து கொள்ளுதே....
உருகி உருகி நிதம் உனக்கென எரிந்திடும் மெழுகு திரிகள் என ஔிந்திடுவோம்..
மலர்ந்து மலர்ந்து உந்தன் பதத்தில் இணைந்திருந்து மணக்கும் மலர்கள் என அலங்கரிப்போம்..
உமது சீடர் எனவே ...
உம் பாத சுவடு நடப்போம்
உமது அன்பின் கணலே உலகம்
முழுதும் நிறைப்போம்....
#நற்கருணையிலே_எழுபவரே_ஆராதனை_புரிவோம் #ஆராதனைபாடல்வரிகள்
Негізгі бет நற்கருணையிலே எழுபவரே... ஆராதனை புரிவோம்
Пікірлер