விளக்கம் - திருமதி பாக்யம் சீனிவாசன்
திருமுருகாற்றுப்படை முருகன் தோற்றம்
முருகன் இருக்கும் இடத்திற்குச் செல்ல வழிகாட்டுவது முருகாற்றுப்படை
திரு என்பது சிறப்பு-அடைமொழி
[1]
புலரும் பொழுது முருகன்
----------------------------------------------------
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு,
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி,
----------------------------------------------------
[2]
உருவக முருகனின் காலும் கையும்
--------------------------------------------------
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்,
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை, 5
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்
---------------------------------------------------
[3]
கடம்ப மலர் மாலையன்
------------------------------------------------------
கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை,
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி,
தலைப் பெயல் தலைஇய தண் நறுங் கானத்து,
இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து 10
உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன்
--------------------------------------------------
சூர்அரமகளிர் (41) ஆடுவர்
----------------------------------------------------
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடி,
கணைக் கால், வாங்கிய நுசுப்பின், பணைத் தோள்,
கோபத்து அன்ன தோயாப் பூந் துகில், 15
பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல்,
---------------------------------------------------
[5]
இயற்கை அழகு
-----------------------------------------------------
கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின்,
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர்இழை,
-------------------------------------------------
[6]
தலை ஒப்பனை
-----------------------------------------------------
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி
துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதிச் 20
செங் கால் வெட்சிச் சீறிதழ் இடை இடுபு,
பைந் தாள் குவளைத் தூ இதழ் கிள்ளி,
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து,
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
----------------------------------------------------
[7)
தலையில் பூ
---------------------------------------------------
மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து, 25
துவர முடித்த துகள் அறும் முச்சிப்
பெருந் தண் சண்பகம் செரீஇ, கருந் தகட்டு
உளைப் பூ மருதின் ஒள் இணர் அட்டி,
-----------------------------------------------------
[8]
காதுப்பூ
--------------------------------------------------
கிளைக் கவின்று எழுதரு கீழ் நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇ, துணைத் தக 30
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
-----------------------------------------------------
[9]
நெஞ்சில் சந்தனம்
-------------------------------------------------------
நுண் பூண் ஆகம் திளைப்ப, திண் காழ்
நறுங் குறடு உரிஞ்சிய பூங் கேழ்த் தேய்வை,
தேம் கமழ் மருது இணர் கடுப்ப, கோங்கின்
குவி முகிழ் இள முலைக் கொட்டி, விரி மலர் 35
வேங்கை நுண் தாது அப்பி, காண்வர,
--------------------------------------------------
[10]
வில்வத் தழையைப் போட்டுப் பூசை செய்தல்
----------------------------------------------------
வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா,
கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி
வாழிய பெரிது!' என்று ஏத்தி, பலர் உடன்
சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி 40
சூரர மகளிர் ஆடும் சோலை,
----------------------------------------------------
Негізгі бет திருமுருகாற்றுப்படை - திருப்பரங்குன்றம் (1- 41 வரிகள்)
Пікірлер: 6