பிரம்மஹத்தி தோஷம் மற்றும் பெண் சாபம் போக்கும் திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில்
மூலவர்: ஏகபுஷ்பபிரியநாதர்
அம்மன்: தாயுனும் நல்லாள்
ஊர்: திருத்திய மலை
மாவட்டம்: திருச்சி
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், திருத்தியமலையில் அமைந்துள்ள அருள்மிகு தாயின்நல்லாள் உடனுறை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில், பிரம்மஹத்தி, சத்ருதோஷம் போக்கும் பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.
தலச்சிறப்பு
தேவ அர்க்கவல்லி புஷ்பத்தை சிவபெருமான் சூடிக் கொண்டது, பிருகு, அகத்தியர் உள்ளிட்ட எண்ணிலடங்கா மகாமுனிவர்கள் வழிபட்டது, சூரியன் தனித்து வழிபட்டது, முருகப்பெருமான் சத்ரு சம்ஹார மூர்த்தியாகக் காட்சியளிப்பது, தட்சிணாமூர்த்தியின் பாத தரிசனம், பிரிந்த தம்பதிகளை மனம் ஒத்துவைத்தல், நட்சத்திர தோஷ நிவர்த்தி போன்ற பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததெனக் கூறப்படுகிறது.
இறைவி அருள்மிகு தாயின் நல்லாள்
பெண்களால் ஏற்படும் சாபங்கள் நீங்க இத்திருக்கோயில் இறைவி தாயின் நல்லாளை வழிபட வேண்டும். அவ்வாறு வழிபடும்போது, பெண்களால் விடப்படும் சாபங்கள் அனைத்தும் நீங்கி, விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
இக்கோயிலில் தங்களது தோஷங்கள் நீங்க, பரிகாரமாக கோயில் வளாகத்தில் அரிசி மாவால் கோலமிட்டு, சுவாமி மற்றும் அம்மனை வழிபட வேண்டும்.
பாத தரிசன தட்சிணாமூர்த்தி
பாத தரிசன தட்சிணாமூர்த்தியாக திருத்தியமலை கோயிலில் அவர் எழுந்தருளியுள்ளார். இவர் கல்விக்கு அதிபதியாக திகழ்கிறார். எந்தவிதமான தேர்வாக இருந்தாலும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் அவர்கள் சிறப்பு பெறுவர். அத்தகைய சிறப்புடைய தட்சிணாமூர்த்தியை வழிபட ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
உமாமகேசுவரர்
கோயிலின் உள்பிரகாரத்தில் உமாமகேசுவரர் தம்பதி சகிதமாக எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். இவ்வாறு ஒரே சிற்பத்தில் தம்பதி சகிதமாக காட்சியளிப்பது சிறப்புக்குரியது. உமாமகேசுவரரை வந்து வணங்கினால் திருமணத் தடை நீங்கும். அனைத்து தோஷங்களும் நிவர்த்தி பெறும்.
மேற்கு நோக்கியவாறு காட்சியளிக்கும் கால பைரவர்
மேலும், மகாலட்சுமிக்கு நேர் எதிரில் மேற்கு நோக்கியவாறு காலபைரவர் எழுந்தருளியுள்ளார். இவ்வாறு சிவாலயங்களில் எழுந்தருளுவது அரிதான ஒன்று. அதுவும் இக்கோயிலில் மேற்கு நோக்கியவாறு காலபைரவர் தனி ஆகரஸ பைவரவாகக் காட்சியளிப்பதும் சிறப்புக்குரியது.
சத்ரு சம்ஹார மூர்த்தியாய் முருகப்பெருமான் சூரனை வதம் செய்து விட்டு, தேவசேனாவை மணந்தது இத்திருக்கோயிலில்தான் என்பது ஐதீகத் தகவலாகும். மேலும் கையில் வேலுடன் சத்ரு சம்ஹார மூர்த்தியாக கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அவர் காட்சியளிக்கிறார்.
இந்த மூர்த்தியை வணங்குவதன் மூலம் தொழில் ரீதியாக நிகழும் பிரச்னைகளுக்குத் தீர்வு, மனக்குழப்பம் நீங்குதல், பயந்த கோளாறு போன்ற பல்வேறு வகையான சத்ரு தோஷங்களைப் போக்கும் வல்லவராக அருள்மிகு முருகப்பெருமான் இங்கு எழுந்தருளியிருக்கிறார்.
பௌர்ணமி கிரிவலத்தின் சிறப்பு
தாயின் நல்லாள் என்றழைக்கப்படும் அதீத கருணாம்பிகை உடனுறை ஏகபுஷ்ப பிரியநாதரை பௌர்ணமி நாளன்று கிரிவலம் வந்தால் 100 அரசமரம், 1000 வில்வமரம், 10000 வன்னி மரம், 1 லட்சம் வேப்பமரம் சுற்றியதன் பலன் கிடைக்கும்.
இத்திருக்கோயிலில் அகத்திய மாமுனிவர், பிருகு மகரிஷி ஒருகோடி முறை கிரிவலம் வந்து சிவபெருமானை அருளைப் பெற்றதால், இக்கோயிலில் பௌர்ணமி நாளன்று கிரிவலம் சிறப்புக்குரியதாகத் திகழ்கிறது.
சுனை தீர்த்தம்
சிவாலயங்களில் தல விருட்சம், தல தீர்த்தம் சிறப்புக்குரியதாக இருக்கும். அந்த வகையில் இக்கோயிலில் தல தீர்த்தமாக சுனை தீர்த்தம் உள்ளது. கோயிலின் வெளிப்பிரகாரப் பகுதியில் வற்றாத தீர்த்தமாக இந்த சுனை தீர்த்தம் அமைந்துள்ளது. வெய்யில் காலம், மழைக் காலம் என எக்காலத்திலும் இங்கு தீர்த்தம் வற்றாது காணப்படுவதுதான் தனிச்சிறப்புக்குரியது. இத்திருக்கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் திகழ்கிறது.
திருவிழாக்கள்
ஆனி மாதத்தில் உத்திர தரிசனம், ஆவணியில் மகா சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் 9 நாள்கள் நடைபெறும் நவராத்திரி வழிபாடு, ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி வழிபாடு, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம் போன்றவை வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
கோயில் நடைதிறப்பு
இக்கோயில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்
தென் மாவட்டங்கள், மத்திய, வடக்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையம், நெ.1. டோல்கேட், நொச்சியம், மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்ஞீலி, மூவானூர், வேங்கைமண்டலம் வழியாக திருத்தியமலைக்குச் செல்லலாம். இதே வழித்தடத்தில் மண்ணச்சநல்லூர் வரை வந்து திருவெள்ளறை, காளவாய்ப்பட்டி, காட்டுக்குளம், மூவானூர், வேங்கைமண்டலம் வழியாகவும், இதே வழித்தடத்தில் நெ.1 டோல்கேட், நொச்சியம், சிறுகாம்பூர், சித்தாம்பூர், மூவானூர் வழியாகவும் கோயிலை வந்தடையலாம்.
மேலும் சேலம், நாமக்கல், கரூர், கோயம்புத்தூர், திருச்சி, தருமபுரி போன்ற மேற்கு மாவட்டங்ளிலிருந்து வருபவர்கள் முசிறி, தண்டலைப்புத்தூர் வழியாக திருத்தியமலைக்கு வரலாம்.
தொடர்புக்கு
இத்திருக்கோயிலுக்குத் தரிசனம் செய்ய வருபவர்கள்,
கோயில் குருக்கள் ஆர். ஹரிசுப்ரமணியனை 6374183953 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு முகவரி
அருள்மிகு தாயின் நல்லாள் உடனுறை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில்,
திருத்தியமலை,
முசிறி வட்டம்,
திருச்சி மாவட்டம்-621006.
கோயில் Google map link
maps.app.goo.gl/jFjdHMM9c3pgJ...
if you want to support us via UPI id
k.navaneethan83@ybl
Join this channel to get access to perks:
/ @mathina
- தமிழ்
Негізгі бет திருத்தியமலை தாயினும்நல்லாள் உடனுறை ஏகபுஷ்பபிரியநாதர் கோயில் |பெண் சாபம் நீங்க வழிபட வேண்டிய தலம்
Пікірлер: 32