மூன்றாம் ஆயிரம்
பேயாழ்வார் அருளிச்செய்த
மூன்றாம் திருவந்தாதி
திருக்கண்டேன்* பொன்மேனி கண்டேன்,* திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்,* - செருக்கிளரும்
பொன்ஆழி கண்டேன்* புரி சங்கம் கைக்கண்டேன்,*
என்ஆழி வண்ணன்பால் இன்று
பதவுரை
பொன் மேனி - அழகிய திருமேனியையும்
கண்டேன் - ஸேவிக்கப் பெற்றேன்
திகழும் - விளங்குகின்ற
அருக்கன் - ஸூர்யன்போன்று
அணி - உஜ்வலமான
விளக்க உரை
உரை:1
‘எம்பெருமானைக் கண்டேன்‘ என்று சொல்லிவிட்டால் அவனிடத்திலுள்ளவையெல்லாம் கண்டமை சொல்லப்பட்டதாக ஆகுமாயிலும், தம்முடைய மகிழ்ச்சியின் மிகுதியினால் ‘அதுகண்டேன் இதுகண்டேன்‘ என்று சிலவற்றைப் பிரித்துப் பேசுகின்றார். புருஷகாரபூதையான பிராட்டியைக் கண்டேன், அவளுடைய சேர்க்கையினாலே நிறம்பெற்ற திருமேனியைக் கண்டேன், மரதக கிரியிலே உதித்து ஒளிவிட்டுக்கிளருகிற பாலஸூர்யனைப்போலே விளங்காநிற்பதாய் இருவருடைய ஒளியும் தன்னிலே கலசி விளங்காநின்றுள்ளதான அழகியநிறத்தையும் கண்டேன், இந்தச் சேர்த்திக்கு என்னதீங்கு வருகிறதோ வென்று அஸ்தாநே பயசங்கைப்பண்ணி யுத்தஸந்நத்தனாய் கண்டார்மேலே சீறிவிழாநின்றவனாய், ச்யாமளமான அவன்வடிவுக்குப் பரபாகமாம்படி பொற்கென்ற நிறத்தையுடையனான திருவாழியாழ்வாணையுங் கண்டேன் கைத்தலத்திலிருந்துகொண்டே பெருமுழக்கத்தாலே சத்துருக்களை உயிர்மாளப்பண்ணும் ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானையும் கண்டேன் என்றாராயிற்று. நூல் இயற்றுவார் மங்கல மொழி முதலிலே வகுத்துக் கூறுவராதலால் ‘திரு‘ என்று தொடங்கினர். பொன்மேனிகண்டேன் -“ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்“ என்கிற சுருதியின்படி பொன்னின் நிறம் போன்ற நிறமுடையளான பிராட்டியின் நித்யஸம் ச்லேஷத்தாலே அப்படியே பொன்னிறமாகப் பெற்றதாம் எம்பெருமானுடைய கரிய திருமேனியும். அன்றியே, பொன்போல் விரும்பத்தக்க மேனி என்றுமாம். “உருவுகரிதாய் முகம் செய்தாய் உதய பருப்பதத்தின் மேல், விரயுங்கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே“ என்ற நாச்சியார் திருமொழிப்பாசுரம் இங்கு நினைக்கத்தகும். “புரிசங்கம் கை கண்டேன்“ என்றும் “புரிசங்கு அம் கை கண்டேன்“ என்றும் பிரிக்கலாம். புரி என்றது வலம்புரி என்றபடி. அன்றியே ஸ்புரிக்கின்ற - விளங்குகின்ற சங்கமென்றுமாம். புரி புரிந்துபார்க்கிற (எங்கே யெங்கேயென்று சுற்றுமுற்றும் சீறிப்பார்க்கிற) சங்கு என்றுமாம். சேஷத்வத்தாலே எப்போதும் வணக்கத்தையுடைய சங்கு என்றுமாம். ஈற்றடியில் எம்பெருமானை ஆழிவண்ணன் என்றது மிகப்பொருந்தும், பிராட்டி, சங்கு, கௌஸ்துபமணி முதலியவை கடலில் தோன்றினவாதலால், அப்படிப்பட்ட வஸ்துக்களை இன்று இக்கடலில் காணப்பெற்றே னென்கிறார் போலும்.
English Translation
Today I have seen the lotus-dame on the frame of my ocean-hued Lord. He wields a fiery discus and a dextral conch in his hands. He has the radiance of the golden sun.
நாமம் பலசொல்லி* நாராயணாஎன்று,*
நாம் கையால் தொழுதும் நல்நெஞ்சே! வா* மருவி
மண்ணுலகம் உண்டுஉமிழ்ந்த* வண்டுஅறையும் தண்துழாய்,*
கண்ணனையே காண்க நம்கண்.
பதவுரை
நல் நெஞ்சே - நல்ல மனமே!
நாராயணா என்று பல நாமம் சொல்லி - நாராயணன் முதலாகவுள்ள பல திருநாமங்களைச் சொல்லி
அம் கையால் - அழகியகையினாலே
நாம் தொழுதும் - நாம் தொழுவோம்
மருவி வா - இதற்கு நீயும் உடன்பட்டுவர
விளக்க உரை
இந்திரியங்களெல்லாவற்றாலும் எம்பெருமானை அநுபவிக்கவேணு மென்கிறார். நாராயணாதி ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லுவதிலே வாய் ஊன்றியிருக்கவேணும், கைகள் அஞ்சலி பண்ணுவதிலே அவகாஹித்திருக்கவேணும், கண்கள் அப்பெருமானையே ஸேவீத்துக் கொண்டிருக்கவேணும். மனத்தின் துணையின்றி ஒரு இந்திரியமும் ஒரு காரியமும் செய்யமாட்டாதாகையாலே இவையித்தனைக்கும் நெஞ்சு உடன்பட்டிருக்கவேணும் என்றதாயிற்று. “வண்டறையுந் தண்டுழாய்க்கண்ணனை“ என்றதனால் - தோளிணைமேலும் நன் மார்பின்மேலும் சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாய் மாலையில் மதுவைப்பருகி ரீங்காரம் செய்கின்ற வண்டுகளின் ஒலியே செவிக்கு விஷயமாகவேணுமென்பதும் அந்த திருத்துழாயின் பரிமளமே மூக்குக்கு விஷயமாகவேணு மென்பதும் தொனிக்குமென்றுணர்க. “ஜிஹ்வே கீர்த்தய கேசவம் முரரிபும்“ என்ற முகுந்தமாலை ச்லோகம் இங்கு ஸமரக்கத்தகும்.
English Translation
Come, O Heart! Let us praise him with love, reciting "Narayana" and his many names, Let us fold our hands in worship. The bee-humming Tulasi-garland Lord Kirshna, swallowed and remade the Earth. Let our eyes see and enjoy his form.
பேயாழ்வார் திருவடிகளே சரணம்
Негізгі бет திவ்யப் பிரபந்தம் - திருக்கண்டேன்...
Пікірлер