#கந்தன் #முருகன் #அருணகிரிநாதர் #Kanthan #Murugan #Thirumurai #Arunagirinathar #சீர்காழி #கோவிந்தராஜன்
தொகுப்பு: கந்தர் அலங்காரம்
அருளியவர்: அருணகிரிநாதர்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
பாடல் 17 ... வேத ஆகம
வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப்
பாதார விந்தம் அரணாக அல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.
......... சொற்பிரிவு .........
வேத ஆகம சித்ர வேலாயுதன் வெட்சிபூத்த தண்டைப்
பாத அரவிந்தம் அரண் ஆக அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே தெரியாத ஒரு பூதருக்குமே.
......... பதவுரை .........
வேதங்களும் ஆகமங்களும் துதிக்கின்ற அழகிய வேற்படையையுடைய
திருமுருகப்பெருமானின், வெட்சிமலரால் ஆகிய மாலை மலர்ந்துள்ளதும்
தண்டை என்னும் அணிகலனை உடையதுமாகிய செந்தாமரைமலர்
போன்ற திருவடிகளைக் காவலாகக்கொண்டு, வேறு ஒருவருக்கும்
தெரியாத நல்ல நெறியாகிய, இரவும்-பகலும்-மறத்தலும்-நினைத்தலும்-
வஞ்சகமும்-அற்ற பரவெளியில் மறைந்து பேசாது சும்மா இருக்கும்
[அநுபூதி] நிலையில் நிலைத்து நிற்கும் பொருட்டு இனியாவது
வருவாயாக மனமே.
பாடல் வரிகள், பொருள்:
www.kaumaram.com/alangkaram/a...
கந்தர் அலங்காரம் playlist in our channel:
• கந்தர் அலங்காரம்
நன்றி!!!
Негізгі бет கந்தர் அலங்காரம் | 17 வேதாகம சித்ர வேலா யுதன் | அருணகிரிநாதர்
Пікірлер: 3