Description
#கந்தன் #முருகன் #அருணகிரிநாதர் #Kanthan #Murugan #Thirumurai #Arunagirinathar #சீர்காழி #கோவிந்தராஜன்
தொகுப்பு: கந்தர் அலங்காரம்
அருளியவர்: அருணகிரிநாதர்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
பாடல் 9 ... தேன் என்று
தேனென்று பாகென்றுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசரீரி யன்று சரீரியன்றே.
......... சொற்பிரிவு .........
தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா மொழித் தெய்வவள்ளி
கோன் அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறவற்றோ
வான் அன்று, கால் அன்று, தீ அன்று, நீர் அன்று, மண்ணும் அன்று,
தான் அன்று, நான் அன்று, அசரீரி அன்று, சரீரி அன்றே.
......... பதவுரை .........
தேன் என்றும் கற்கண்டு என்றும் ஒப்புமை சொல்வதற்கு இயலாத இனிய
மொழியை உடைய தெய்வமடந்தையாகிய வள்ளிநாயகியாரது கணவராகிய
திருமுருகப்பெருமான் அடியேனுக்குக் குருவாக வந்து உபதேசித்து
அருளிய மெய்ப்பொருள் ஒன்று உள்ளது. [அஃது] ஆகாயம் அன்று,
காற்று அன்று, நெருப்பு அன்று, தண்ணீர் அன்று, மண்ணும் அன்று,
தான் அன்று, நான் அன்று, உருவமில்லாதது அன்று, உருவத்தை
உடையதும் அன்று. [அஃது, ஒன்றும் அற்ற ஒன்று].
பாடல் வரிகள், பொருள்:
www.kaumaram.com/alangkaram/a...
கந்தர் அலங்காரம் playlist in our channel:
• கந்தர் அலங்காரம்
நன்றி!!!
Негізгі бет கந்தர் அலங்காரம் | 9 தேனென்று பாகென்று உவமிக் கொணாமொழி | அருணகிரிநாதர்
Пікірлер