#கந்தன் #முருகன் #அருணகிரிநாதர் #Kanthan #Murugan #Thirumurai #Arunagirinathar #சீர்காழி #கோவிந்தராஜன்
தொகுப்பு: கந்தர் அலங்காரம்
அருளியவர்: அருணகிரிநாதர்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
பாடல் 30. ... பால் என்பது மொழி
பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண்
சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே.
......... சொற்பிரிவு .........
பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண்
சேல் என்பது ஆகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டைக்
கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே?
......... பதவுரை .........
பாலை ஒத்தது [பெண்களின்] சொல், பஞ்சை ஒத்தது பாதம், கண்கள்
கெண்டை மீனை ஒத்தவை என்று எண்ணி மயங்கித் திரிகின்ற மனமாகிய
நீ, திருச்செந்தூர்த் திருமுருகப்பெருமானின் திருக்கையில் விளங்கும்
வேலாயுதமே என்று சொல்கின்றாயில்லை; வெற்றிபொருந்திய மயில்
என்றும் சொல்கின்றாயில்லை; வெட்சி மலரையும் தண்டையையும்
அணிந்த திருவடிகள் என்கின்றாயில்லை. [ஆதலால்] நீ முத்திப் பேற்றை
அடைவது எங்ஙனமோ?
பாடல் வரிகள், பொருள்:
www.kaumaram.com/alangkaram/a...
கந்தர் அலங்காரம் playlist in our channel:
• கந்தர் அலங்காரம்
நன்றி!!!
Негізгі бет கந்தர் அலங்காரம் | 30 பாலென்பது மொழி பஞ்சென்பது பதம் | அருணகிரிநாதர்
Пікірлер: 1