அருணகிரிநாதர் முருகப்பெருமானை போற்றி பல பாடல்களை பாடியுள்ளார். அப்பாடல்களின் தொகுப்பே திருப்புகழ். இந்த வீடியோ "அவனிதனிலே பிறந்து" பாடலின் விளக்கவுரை ஆகும்.
#######################
Saint Arunagirinadhar wrote hymns on Lord Muruga. Collectively the songs are called as Thiruppugazh. This video has explanation for the song "Avani-dhanilE-piRandhu".
#######################
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த ...... கழல்வீரா
பரமபத மாய செந்தில் முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
#######################
Note: Song lyrics & audio recording for the songs can be downloaded from
www.chinmayasar...
#######################
திருப்புகழ் சொற்பொழிவு, ப்ரதி செவ்வாய் மற்றும் வியாழன், மாலை 6.45 - 7.15.
மேலும் விவரங்களுக்கு, 95660 56993.
#######################
Негізгі бет Thiruppugazh Session 11 Avani-dhanilE-piRandhu || திருப்புகழ் 11 அவனிதனிலே பிறந்து
Пікірлер: 18