0:00:00 உயர் வள்ளுவம் வகுப்பு 31
0:00:26 முன்னுரை
0:03:45 "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்."
0:04:34 பொறாமை = பிறர் ஆக்கம் கண்டு பொறாமை
0:09:47 திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரமும் நமக்குக் கண்ணாடி
0:10:26 "தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்."
0:13:21 நன்மைக்கும், தீமைக்கும் உரிய பொது இயல்பு
0:14:48 பொறாமை என்ற தன்மையை அகற்ற வழி
0:16:53 ஒவ்வொரு அரிசியிலும், அந்த அரிசிக்குரியவனுடைய பெயர் எழுதப் பட்டிருக்கிறது.
0:18:21 "நீதிநெறி விளக்கம் - நேரிசை வெண்பா ."
0:19:44 இயல்பிலேயே பொறாமைக் குணம் கொண்டவன்- துரியோதனன்.
0:20:37 பொறாமைப் படுவதால் வீழ்ச்சியே வரும்
0:22:36 பாயிரம்
0:30:01 "குறள் 161 ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு."
0:33:42 வார்த்தைக்குப் பெருமதி வர என்ன செய்ய வேண்டும்?
0:34:35 இயல்பு = அறிவோடு கூடிய தன்மை
0:36:05 "கைகேயியினிடம் இராமன் விடை கொள்ளுதல் :
மன்னவன் பணி அன்றாகின், "
0:39:48 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
0:42:04 "குறள் 162 விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்."
0:44:18 யார்மாட்டும் = பகைவரிடத்தும்; அண்மை = வேறாதல்
0:46:32 பொறாமை என்னும் நஞ்சு
0:50:31 "குறள் 163 அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்."
0:50:59 அறனாக்கம் = அறன் + ஆக்கம். ஆக்கம் = செல்வம்
0:54:48 "குறள் 164 அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து."
0:56:49 ஊனமிலான் மானமிலான் உரைத்தது என் செய்ய? - பீமன் கண்மலரில் கைபடாதோ? - தருமன்
1:01:37 "குறள் 165 அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது."
1:02:05 திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தில் பத்து குறட்பாக்கள் வைத்ததன் காரணம்!
1:04:08 பிரிநிலை ஏகாரம், விகாரத்தால் தொக்கது
1:06:13 திருக்குறள் படிப்பதன் பயன்
1:10:48 "குறள் 166 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்."
1:11:00 பொறாமையின் கேவல நிலை
1:12:00 வாமன அவதாரம்
1:12:00 "நன்னூல் 9 முன்னோர்"
1:17:31 நல்லாசிரியர்கள் கிடைக்கப் பெறுதல் வரம்!
1:19:46 சுற்றம் கெடுவதால், தான் கெடுதலும் உறுதி!
1:24:41 "குறள் 167அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்."
1:27:11 மகாலட்சுமி தன் தமக்கையைக் கொண்டு வந்துவிட்டுத் தான் சென்று விடுவாள்.
1:30:39 ஐ உருபு " கு " உருபாக மாறுகிறது. - தக்க சான்று!
1:31:54 நூல் என்ற பெயர்க் காரணம். கோடுவித்தல் = வளைத்தல்
1:35:40 "குறள் 168 அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்."
1:36:03 ஒரு = ஒன்று; ஒரு = ஒப்பற்ற. கம்பன் என்றொரு மானுடன் வந்தான்.
1:36:03 " கந்த புராணம் - கச்சியப்ப சிவாச்சாரியார்
1:38:34 ஒப்பற்ற பாவி = இம்மையில் செல்வம் போய்விடும்; மறுமையில் வீடு கிடைக்காது.
1:39:43 பண்பைப் பண்பியாக்கி உரைத்தல்
1:44:03 "குறள் 169 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்."
1:44:25 பொறாமைப் பட்டவனின் வளர்ச்சியும், நல்லவனுடைய கேடும் - விதிவிலக்கு.
1:44:25 "சிலப்பதிகாரம்-இம்மைச் செய்தன யானறி நல்வினை;"
1:47:55 நிரல் நிறையாகப் பொருள் கொள்ளுதல்
1:52:17 "குறள் 170 அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்."
1:54:32 தொகுப்புரை
0:18:21 "நீதிநெறி விளக்கம் - நேரிசை வெண்பா
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென்(று) அகமகிழ்க - தம்மினுங்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக; கற்றதெல்லாம்
எற்றே இவர்க்குநாம் என்று."
1:12:00 "நன்னூல் 9 முன்னோர் மொழிபொருளே அன்றி அவர்மொழியும்
பொன்னேபோல் போற்றுவம் என்பதற்கும் - முன்னோரின்
வேறுநூல் செய்வதும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும்
கூறுபழம் சூத்திரத்தின் கோள்."
1:36:03 "கந்த புராணம் - கச்சியப்ப சிவாச்சாரியார்
அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒரு திரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகம் உய்ய."
1:44:25 " சிலப்பதிகாரம்
இம்மைச் செய்தன யானறி நல்வினை;
உம்மைப் பயன்கொல், ஒருதனி யுழந்து,இத்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது, "
Jeyaraj Ayya (இலங்கை ஜெயராஜ் ஐயா), in this Thirukkural class (திருக்குறள் வகுப்பு) , explains in depth the Azhukkaraamai adhigaram .
இயல்: இல்லறவியல்; பால்: அறத்துப்பால்; அதிகாரம் 17: அழுக்காறாமை
இறையருளால் இலங்கை ஜெயராஜ் ஐயா பரிமேலழகரின் உரை அடிப்படையில் நடத்தும் திருக்குறள் தொடர் வகுப்புகள், உயர் வள்ளுவம். இது, திருக்குறள் முலமாக அறத்தை எல்லோரின் வாழ்வியலாக்கும் முயற்சி.
www.karka.in #Uyarvalluvam #Karkakasadarach #UyirNokku
Негізгі бет 031 Uyar Valluvam Thirukkural- அழுக்காறாமை (Azhukkaraamai)
Пікірлер: 45