#கந்தன் #முருகன் #அருணகிரிநாதர் #Kanthan #Murugan #Thirumurai #Arunagirinathar #சீர்காழி #கோவிந்தராஜன்
தொகுப்பு: கந்தர் அலங்காரம்
அருளியவர்: அருணகிரிநாதர்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
பாடல் 75 ...
படிக்கின்றிலைபடிக்கின் றிலைபழ நித்திரு நாமம் படிப்பவர்தாள்
முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டு
மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே
.......... சொற்பிரிவு .........
படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை, முருகா என்கிலை, முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கு இனியே?
......... பதவுரை .........
ஓ, நெஞ்சமே, பழநியில் எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானின்திருநாமங்களை ஓதுகின்றாயில்லை. பழநி ஆண்டவரதுதிருநாமங்களை ஓதுகின்ற அடியார்களின் திருவடிகளைத் தலையில்சூடிக் கொள்கின்றாயில்லை. [பரம்பொருளாகிய திருமுருகப்பெருமானை]'முருகா' என்று அழைக்கின்றாயில்லை. யாசிப்பவர்கள் பசியால்மெலிவடையாமல் இருக்கும் பொருட்டு அவர்களுக்குப் உணவு வழங்கிஅதனால் நீ வறியவனாகிவிடவில்லை. பேரின்பம் மிகுதியாகவரும்பொருட்டு விம்மி விம்மி அழுது ஆடுகின்றாயில்லை. இனி நமக்குஅடைக்கலம் தரும் பற்றுக்கோடு எங்கு உள்ளது?
பாடல் வரிகள், பொருள்:
www.kaumaram.com/alangkaram/a...
கந்தர் அலங்காரம் playlist in our channel: • கந்தர் அலங்காரம்
நன்றி!!!
Негізгі бет கந்தர் அலங்காரம் | 75 படிக்கின்றிலை பழநித் திருநாமம் | அருணகிரிநாதர்
Пікірлер: 2